தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

1. பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.

2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வேண்டி வந்தாலும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகையால் எல்லா அசிங்கங்களையும் மறைத்து புகை மேகத்துக்குள் இருப்பது. தேவலோகத்தில் இருப்பது போல, மேகத்துக்கிடையே சஞ்சரிப்பது போன்ற அனுபவம் தரும்.

4. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாக தெரியாது.

5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கடன் காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.

6. சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.

8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.

9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வேண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம், தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித்து அதில் எதிரியின் அழிவைக் கற்பனை செய்து ஆசுவாசப்படலாம், சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.

10. சிகரெட் பிடித்து லொக் லொக் கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கலாம். பிறர் கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.

11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.

12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத் தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

13. இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.

14. வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம்.

15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய் விடும்.

16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.

17. புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க்கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.

18. மிகவும் அத்தியாவசியமாக இருந்தாலொழிய யாரும் அருகில் வந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட்டார்கள்.

19. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.

20. வாழ்வின் பிற்பகுதியில் டாகடர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.

21. சிகரெட் பாக்கெட்,காலி தீப்பெட்டி,எரிந்த தீக்குச்சி,சிகரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்து வைத்து சாதனை படைக்கலாம். கலைப் படைப்புகள் உருவாக்கலாம்.

22. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின்னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளையாட்டுப் பொருட்கள் வாங்கத் தேவையில்லை.

23. மக்கள் நெருக்கமாக உள்ள இடங்களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.

24. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ளலாம்.

25. நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக்கண்டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.

மேலே படித்துவிட்டு சிரித்தபிறகு சிந்திப்பவர்களுக்கு சில துளிகள் கீழே

சிகரெட்டை விட்டவர் வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
சீக்கு வந்து சாவாரே சாவார்.


நியூசி லாந்துநாட்டில் ஆன்டனி ராட்ஜஸ் என்னும் டாக்டர் இளைஞர்கள் மத்தி யில் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறார்.

800க்கும் மேற்பட்ட இளைஞர் களை தேர்வு செய்து அவர்களுக்கு சிகரெட் பிடிப்பதை நிறுத்தும் ஆலோச னைகளை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இந்த சோதனையில் பங்கேற்ற 28 சதவீதம் பேர் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டிருக்கின்றனர். சிகரெட் பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு பல நேரங்களில் சிகரெட் பிடிக்கும் விருப்பத்தை கட்டுப்படுத்த முடியா ததே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அந்த நேரங்களில் எல்லாம் எஸ்.எம்.எஸ். வந்து காப்பாற்றி விடும் என்பது நல்ல யுத்திதான். அது மட்டுமல்லாமல், சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்போது எஸ்.எம்.எஸ். செய்தி அனுப்ப முயற்சிப்பது மனதை திசை திருப்பிவிடும் என்று ராட்ஜஸ் கூறுகிறார். தன்னுடைய ஆய்வில் பங்கேற்ற இளைஞர்கள் பலர் இப்படி எஸ்.எம்.எஸ்.ல் ஆழ்ந்து சிகரெட் பிடிப்பதை மறந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
இளைய தலைமுறையினர் செல் போனும், கையுமாக சுத்திக் கொண்டி ருக்கும்நிலையில் புகை பிடிப்பதை நிறுத்துவதற்கு எஸ்.எம்.எஸ். சரியான ஆயுதமாக இருக்கும் என்று கருத வேண்டி இருக்கிறது.

நீங்களும் சிகரெட் பிடிக்க தோணும்போது உங்கள் mobil inbox-ல் இருக்கும் மொக்கையோ, கடியோ வெட்டிபய நண்பர்களுக்கு அனுப்ப முயற்சிக்கலாமே….


What's In That Cigarette?
There are over 4,000 chemicals in tobacco smoke and at least 69 of those chemicals are known to cause cancer.

Thanks to Dinamalar.
ஆகஸ்ட் 25,2009,00:00 IST

இலவசம், விலை குறைப்பு என்ற போர்வையில், பொருட்களின் எடையைக் குறைத்து, நுகர்வோரை பல பன்னாட்டு நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன.இரண்டு வாங்கினால் மூன்று இலவசம், இது வாங்கினால் அது இலவசம் என, இலவசங்களைக் கண்டு பழகிப்போன மக்கள், இலவசம் என்றாலே அந்த பொருளை வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.


இந்த பேராசை தான், தற்போது, பெரும் நஷ்டத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இலவசங்களை கொடுத்து, பல பன்னாட்டு நிறுவனங்கள், நம் நாட்டு தயாரிப்புப் பொருட்களை அண்ட விடாமல் செய்து வருகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் ஒரு பொருளின் விலையைக் குறைத்தால், பன்னாட்டு நிறுவனங்கள் சில நேரங்களில், விலையைக் குறைக்கின்றன; பல நேரங்களில் பொருளின் எடையை குறைக்கின்றன.
பொருளை மட்டும் பார்க்கும் பொதுமக்கள் கண்ணுக்கு, எடை குறைப்பு தெரிவதில்லை. தற்போது, நுகர்வோர் சந்தையில், அதிகளவில் வெளிவரும் குளியல் சோப்பு, வாஷிங் பவுடர், சலவை சோப்பு மற்றும் சில உணவுப் பொருட்களில், பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, பொருட்கள் அளவு இருப்பதில்லை.


பொருளின் எடையைக் குறைக்கும் நிறுவனங்கள், விலையில் எந்த குறைப்பும் செய்வதில்லை; மாறாக, சமயம் பார்த்து உயர்த்தவே செய்கின்றன. விளம்பரம் என்ற வியாபார யுக்தி, மக்களின் கண்ணை முழுவதுமாக மறைத்துவிடுகிறது.குளியல் சோப்புகளான ஹமாம், ரெக்சோனா, லக்ஸ், லைபாய் மற்றும் சலவை சோப்பான ரின் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனம் விலையை நிலை நிறுத்தி, எடையைக் குறைத்துள் ளது. 400 கிராம் விம் பார் 365 கிராம் தான் உள்ளது. இதன் விலை பல காலமாக 19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


அதேபோல, 200 கிராம் என்பது 192 கிராம் தான் உள்ளது. இவ்வாறாக நுகர்வோர் அதிகளவில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களில் 8 முதல் 150 கிராம் வரையில் எடை குறைப்பு உள்ளது.எடை குறைவு குறித்து, இந்நிறுவனங்கள் பாக்கெட்களின் மீது அறிவிப்பு எதையும் தருவதில்லை. ஒரு கிலோ டைடு சலவை பவுடர் பாக்கெட்டை எடை போட்டு பார்க்கும்போது 900 கிராம் மட்டுமே உள்ளது; 100 கிராம் குறைவாக உள்ளது. நுகர்வோர் எடை போட்டு பார்த்தால், தங்கள் பெயர் தான் கெடுகிறது என, வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சோப்பு, சலவைத்தூள் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படும் கச்சா பொருட்கள் விலை குறைந்துள்ள சூழலில், இந்திய தயாரிப்புகள் விலை குறைந்துள்ளன. குறிப்பாக, உள்ளூரில் தயாரிக்கப்படும் சலவை சோப்பு, பவுடர்கள் விலையில் கடும் இறக்கம் ஏற்பட்டுள்ளது. இதே மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் மற்ற பன்னாட்டு நிறுவனங்கள், ஒப்புக்கு கூட விலையை குறைக்கவில்லை. மாறாக, எடை குறைப்பை செய்துள்ளன.


இதுகுறித்து, தமிழக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது:கச்சா எண்ணெய் விலை குறைவு, மூலப்பொருட்கள் விலை குறைவு என்பது அனைவருக்கும் தெரியும். சுதேசி தயாரிப்புகள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டுள்ளன. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டும் குறையவில்லை. மாறாக, எடையை கணிசமாக குறைத்துள்ளன.விலையைக் குறைக்காமல், தங்கள் நிறுவனத்தின் துணை தயாரிப்புகளை இலவசமாக கொடுக்கும் தந்திரத்தைக் கையாள் கின்றன. உதாரணமாக, ஹமாம் சோப் வாங்கினால், தற்போது, இரண்டு ரூபாய் மதிப்புள்ள புரூ காபி தூள் பாக்கெட் இலவசம். நுகர்வோர் இலவசத்தை கண்டு ஏமாறுகின்றனர்.

சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters