தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு

”என்னடா, இவ்வளவு லேட்டு? நீ சீக்கிரம் வந்துடுவனு நான் சீக்கிரம் வந்துட்டேன். ஃபோன் பண்ணாலும் எடுக்கல. என்னடா ஆச்சு?”

“சாரிடா. கொஞ்சம் லேட்டாகிடுச்சி”

“டேய், இது என்ன காலேஜ்க்கு லேட்டா வந்தா, ஏன் லேட்டுனு லெக்சரர் கேட்டா, சாரி சார் லேட்டாகிடுச்சினு சொல்ற மாதிரி இருக்கு. பத்து மணிக்கு நீ வந்தா அது லேட்டு தான். என்ன நடந்துச்சுனு சொல்லி தொலை. டென்ஷன் தாங்கல”

“இரு சொல்றேன். காலைல எட்டு மணிக்கு ஆபிஸ் போயிட்டேன்”

“இப்ப அந்த கருமத்தை எல்லாம் எவன் கேட்டான். அவ ஓகே சொன்னாலா இல்லையானு சொல்லி தொலைடா”

“இருடா. சொல்றேன். காலைல அவ ஒன்பது மணிக்கு தான் வந்தா. எதுவும் பேசாம அவ சீட்டுக்கு போயிட்டா”

“ம்ம்ம்”

“மதியம், நாங்க நாலு பேர் லஞ்ச்க்கு போகும் போதும் எதுவும் அதை பத்தி பேசலை. நல்லா சிரிச்சி பேசிட்டு தான் வந்தா. ஆனா எதுவுமே தெரியாத மாதிரி”

“எல்லா பொண்ணுங்களும் இப்படி தான். சரி நீ மேட்டருக்கு வா”

“மதியம் மூணு மணிக்கா பிங் பண்ணி, மூன்ரைக்கா காபி குடிக்க போகலாம்னு சொன்னா”

“ம்”

“நான் சரியா மூணு இருபதுக்கு எல்லாம் புறப்பட்டு போயிட்டேன். அவளுக்காக காத்துட்டு இருந்தேன்”

“வந்தாளா வரலையா?”

“சரியா மூன்ரைக்கு வந்துட்டா. வந்து நேரா காபி வாங்க போயிட்டா. நானும் சரினு போய் அங்க காபி வாங்கினேன். அவ அவளுக்கு மட்டும் தான் வாங்கினா. எனக்கு நான் தான் தனியா வாங்கினேன்”

“ரொம்ப முக்கியம். கதையை சொல்லுடா”

“ரெண்டு பேரும் காபி வாங்கிட்டு வந்து சீட்ல உட்கார்ந்தோம். ரெண்டு சிப் குடிச்சிட்டு நான் பேச ஆரம்பிச்சேன். ’சொல்லு தீபா, வீட்ல என்ன சொன்னாங்க?’ அப்படினு கேட்டேன்.
‘நல்லபடியா பொயிட்டு பத்திரமா இருமானு சொன்னாங்க’ அப்படினு ரொம்ப கேஷ்வலா சொன்னா”

“டார்ச்சர்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கு. சரி அப்பறம் என்ன ஆச்சு”

“எனக்கும் கடுப்பாயிடுச்சு. ‘தீபா, வீட்ல நம்ம கல்யாணத்தை பத்தி பேசறனு சொன்னியே. என்னாச்சு’.
‘நான் வீட்ல சொல்லலை. எனக்கு எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியலை. அவுங்க கேட்டா என்ன பதில் சொல்றதும்னு தெரியலை’”

“அடப்பாவி. அப்பறம் எதுக்கு வீட்ல கேட்டு சொல்றேனு சொன்னா?”

”இரு இன்னும் முடியலை. சொல்றேன் கேளு. ‘அப்ப வீட்ல கேட்டு சொல்றேனு சொன்ன’.
‘அப்ப ஏதோ ஒரு தைரியத்துல சொல்லிட்டேன். வீட்டுக்கு போனவுடனே அந்த தைரியமெல்லாம் பயமா மாறிடுச்சு. அவுங்க கல்யாண பேச்சு எடுத்தா அப்ப ஞாபகம் வந்தா சொல்றேன்’”

“விடு மச்சி. ரொம்ப புத்திசாலியா இருக்கா. வேற பொண்ணை பார்த்துக்கலாம்”

“டேய் நாயே இன்னும் முடியல. கேளு. ஒரு நிமிஷம் நானும் எதுவும் பேசாம உட்கார்ந்திருந்தேன். அவளே பேச ஆரம்பிச்சா, ‘எங்க வீட்ல பேசறனு சொன்னதுக்கு பதிலா, உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்லைனு நான் அப்பவே சொல்லிருக்கலாம். என் தப்பு தான். சாரி’”

“”

“ஒரு நிமிஷம் எனக்கு மூளை எல்லாம் ப்ளாங்கா ஆகிடுச்சு. இதே பதிலை அவ அன்னைக்கு சொல்லிருந்தா கூட நான் இந்த அளவுக்கு ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன். ஆஃப் ஷோர்ல இருந்து கஷ்டப்பட்டு வீசாவெல்லாம் வாங்கிட்டு ஆன் சைட்டுக்கு கிளம்பி ஏர் போர்ட்டுக்கு போனதுக்கப்பறம் ஃபோன் பண்ணி, பிராஜக்ட் ஊத்திக்கிச்சி. நீ ஆன் சைட் எல்லாம் போக வேண்டாம். திங்க கிழமை ஆபிஸுக்கே வா, பேசிக்கலாம்னு சொன்னா எப்படி இருக்கும். விசா ரிஜக்ட் ஆகறதை விட இது கொடுமையில்லையா. அதே மாதிரி தான் எனக்கும் இருந்துச்சு. நிச்சயம் கண்ணு கலங்க கூடாதுனு ஒரு முடிவோட இருந்தேன்”

“வீட்றா மச்சி. இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு”

“இருடா. இன்னும் முடியல”

“இன்னும் முடியலையா. இப்பவே இவ்வளவு சொன்னா, இன்னும் அடிச்சிட்டு எவ்வளவு நேரம் பேசப்போறியோ. சரி சீக்கிரம் சொல்லு”

“ஒரு நிமிஷம் அமைதியா இருந்துட்டு, என் முகத்தை பார்த்து சிரிச்சிக்கிட்டே பேச ஆரம்பிச்சா, ’இந்த மாதிரி நான் பொய் சொன்னாலும், நீ என்னை கடைசி வரைக்கும் இதே மாதிரி நேசிப்பாயா’ அப்படினு கேட்டா”

“வாவ்.... சூப்பர்டா மச்சான் “

”டேய் விசிலடிக்கறதை நிறுத்துடா”

“மச்சி... பட்டையை கிளப்பிட்டடா. எப்படிடா ஒன்னைய போய் ஒரு பொண்ணு லவ் பண்ண ஒத்துக்கிச்சு?”

“டேய், இதுல ஒத்துக்கறதெல்லாம் ஒண்ணுமில்லை. அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்குமாம். நான் சொன்னப்ப அவளுக்கு உடனே எப்படி ரியாக்ட் பண்றதுனு தெரியலையாம். வீட்ல போய் யோசிக்கும் போது அவளுக்கு என்னை பிடிச்சிருக்குதுனு அவளேக்கே புரிஞ்சிடுச்சாம்”

“சூப்பர்டா மச்சான். இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சி தான், நான் வரும் போது MC ஹாஃப் வாங்கிட்டு வந்துட்டேன். ஸ்பிரைட் கூட இருக்கு. வா இதை தண்ணி அடிச்சி எஞ்சாய் பண்றோம்”


சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters