தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு

குடிகாரர்களிடம் பிடிக்காத பத்து!

1.முதல் நாலு ரவுண்டு அடிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு ஐந்தாவது ரவுண்டில்,போன வருச மேட்டரை இழுத்து நான் பண்ணது தப்பு தாண்டான்னு சீன் போடுவது ஏன்?

2.குடிக்காதவனோ அல்லது கொஞ்சமாக குடிச்சவனோ கிடைத்தால் காதில் ரத்தம் வரும் வரை அவனை டரியல் ஆக்குவது ஏன்?

3.என்ன தான் ஓசியில் சரக்கு வாங்கி தந்தாலும் சியர்ஸ் சொல்வது போல் அளவு பார்க்கும் புத்தி என்று தான் மாறும்!

4.எப்போ ஆஃப்பாயில் போட்டாலும், ஸாரி மச்சி சரக்கு மாத்தி அடிச்சிட்டேன் என்றோ, மச்சி இந்த கடையில டூப்ளிகேட் சரக்குடா, இனிமே இங்க வரக்கூடாதுன்னு நீ மட்டும் சீன் போடுவது ஏன்?

5.அது எப்படி சித்தப்பு சரக்கு அடிச்சா மட்டும் உங்களுக்கு கண்ணுல அணைகட்டு உடைஞ்சா மாதிரி தண்ணி பொலபொலன்னு வருது!

6.தண்ணிய போட்டோமா, வீட்டுக்கு போனோமான்னு இல்லாம, கொஞ்சம் மப்பு ஏறுனவுடன் பார் சப்ளையருகெல்லாம் சரக்கு வாங்கி தர்ற வள்ளல் ஆகிறுருயே எப்படி?

7.அவசரத்துக்கு நூறு, இரநூறு கேட்டா இல்லைம்ப! சரக்கு மட்டும் கேக்காட்டியும் குவாட்டர் குவாட்டரா வருதே எப்படிடா?

8.சாதரணமா நாய் குழைச்சாலே அடுத்த தெருவில முட்டிட்டு ஓடுவ! ஆனா சரக்க போட்டா மட்டும் பக்கத்து நாட்டு பிரதமரையே வெட்டுவேன்னு அருவா எடுக்குறியே எப்படி மாப்பி!

9.புதுசா கூட சரக்கடிக்கிறவங்கிட்ட ஒரு ஃபுல்ல ரெண்டு ரவுண்டுல அடிப்பேன்ன்னு டரியலாக்கிட்டு, ஒரு ஃபுல் கிங்பிஷ்ஷர் பீர்ன்னு ஆர்டர் கொடுக்க எப்படிடா தைரியம் வருது!

10.மப்புல வீட்டுக்கு வந்து ட்ராப் பண்ணும் போது வீட்டுக்கு பத்தடி தூரத்துல எல்லா மப்பும் காணாம போயி, மச்சி இப்படியே நீ அப்பீட்டு ஆகிகன்னு ஃப்ரெண்டை எப்படிடா உன்னால துரத்த முடியுது!

11.நீ சரக்கடிச்சேன்னு ஊருகெல்லாம் காட்டுறதுக்கு நைட்டு போனை போட்டு எல்லாத்து வயித்துலயும் நெருப்ப பத்த வைக்கிறியே ஏன் இப்படி?

பதினொன்னு இருக்கோ! ஸாரி மப்புல நம்பர் சரியா தெரியல!


குடிகாரர்களிடம் பிடித்த பத்து!

1. ஏதோ கோவில் பூஜைக்கு செல்வது போல் குளித்து
புத்துணர்ச்சியுடன் சரக்கு அடிக்க உட்காரும் போதும் ....

2. பாட்டில் திறக்கும் முன் இந்த பூனையும் பால் குடிக்குமா?
என்று இருக்கும் நபர்களை பார்க்கும் போதும்.....

3. குடிக்காத நண்பர்களுக்கு(அதாங்க சைடுடிஷ் மட்டும்
சாப்பிடும் நல் உள்ளம் கொண்டவர்கள்) கணக்கு பண்ணி
சைடுடிஷ் அதிகமாக வாங்கும் போதும் .....

4. சரக்கு ஊத்தும் போது "மச்சான் கம்மியா ஊத்து டா"
என்று சொல்லும்போதும் .......

5. "மச்சான் பீர்ல நூரை அதிகமா இருந்தா மிச்சர் போட்டா
சரி ஆயிடும் மச்சி" என்று டிப்ஸ் தரும் போதும் .....

6. கண்டிப்பா ஒரு குழுவில் இந்த மாதிரி ஒரு நண்பர்
இருப்பார், சுத்தி உக்காந்து இருப்பவர்கள் அனைவருக்கும்
சரி சமமாக ஊத்தி கொடுக்கும் நல்உள்ளம் கொண்டவர்களை
ரொம்ப பிடிக்கும்.

7. சரக்கு கிடைக்கும் என்ற ஒரே காரணத்துக்காக நண்பர்களின்
அனைவரது பிறந்த தேதியையும் விரல் நூனியில் வைத்துருக்கும்
போதும்,எவ்வளவு சரக்கு அடித்து சலம்பி கொண்டு இருந்தாலும்
"மச்சான் போதையே இல்லடா" என்று சொல்லும் போதும்...

8. ஓவர் போதை ஆயி சலம்பி கொண்டிருக்கும் நண்பனின்
தொண்டை வரை கையை விட்டு வாந்தி எடுக்க வைக்கும்
போதும் ..................

9. சரக்கு அடித்த பின் போதையில் இருக்கும் நண்பனை
"மச்சான் நீ செம போதை, உன்னை வீட்ல ட்ராப் பண்ணிடிரேன்" என்று ஸ்டெடியாக நிற்க கூட முடியமால் இருக்கும் நண்பன் கேக்கும் போதும்........

10.என்னதான் வாந்தி எடுத்தாலும்(இதை வேற வீடியோ
எடுப்பானுங்க) அடுத்த நாள் ஒன்னுமே தெரியாத பாப்பா
போல் இருக்கும் போதும்..........

11.. கடைசியா ஒன்னு,எதுக்கெல்லாம் காசு போடுராங்கோல
இல்லையோ, ஆனா குடின்னு வந்துட்டா நம்ம ஆளுங்க
அள்ளி விசும் போதும்............... எனக்கு குடிகாரங்களை
ரெம்பா பிடிக்கும்......

சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters