தண்ணிவண்டி

சுட்டதும் சுடாததும் உங்கள் தாகத்திற்கு



எல்லாரும் எழுதுறாங்கன்னு நானும் ஆவேசப்பட்டு blog ஆரம்பிச்சேன். நண்பர்கள் எல்லாருக்கும் மெயிலில் என்னோட blog link இணைத்து அனுப்பி தொல்லை குடுத்தேன். பய புள்ளைங்க ரொம்ப பயந்துட்டாங்க அப்புறம் call செய்தாகூட கட் பண்ண ஆரம்பிசிட்டாங்க. போதும் இந்த response ன்னு மூட்ட கட்டிவசிட்டேன். திடீர்ன்னு 6 மாசம் 4 நாள் 2 மணி  நேரத்துக்கு அப்பறம் ஆடி தள்ளுபடி sms ன்னு ஒரு டுபாகூர் பதிவ போட நண்பர் (நாமலே build up பன்னலன்ன வேற யார் செய்வா) எஸ்.கே (http://manamplus.blogspot.com/) ன்னு ஒருத்தர் அத (எப்படித்தான் கண்ல மாட்டிசோ) படிச்சிட்டு நல்லாயிருக்கு!ன்னு பின்னூட்டம் போட்டார். அவர் ரொம்ப நல்ல்லல்ல்ல்வர்ர்ர். ஆனா, மத்தவங்களுக்கு கெட்டவர் ஆக போறார் ஏன்னா அவர் நல்லாயிருக்குன்னு சொன்னதால இதையே Inspiration அப்படின்னு நானே நினைச்சிக்கிட்டு அடுத்த அடுத்த மொக்க பதிவ போட போறேன். யாராவது தப்பி தவறி தண்ணிவண்டிய படிச்சாங்கன்னா சும்மா இருந்த சங்க ஊத்தி கெடுத்துட்டாரேன்னு எஸ்.கே திட்டு  வாங்க போறது உறுதி. எது எப்படியோ என்னோட பதிவுக்கும் விமர்சனம் வந்ததால ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்ன்ன்னன்ன்ன்.
பி.கு:
இந்த பதிவுக்கும் யாராவது திட்டியோ, (ஒருவேளை)பாராட்டியோ  பின்னூட்டம் போட்டா மறுபடியும் என் மொக்கை பதிவுகள் தொடரும்.  நன்றி....





சும்மா சீனுங்கோ

தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?
free counters